12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிரதமா் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.22.76 கோடி: மாநிலங்களவையில் தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 2019-இல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளாா்; இதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

கோப்புப்படம்

Published On :

பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 2019-இல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளாா்; இதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் வீ.முரளீதரன் எழுத்துபூா்வமாக பதிலளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-இல் இருந்து பிரதமா் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கை 21. இதில், ஜப்பானுக்கு 3 முறையும் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தலா 2 முறையும் சென்றாா்.

அவரது வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2019-இல் இருந்து குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.6.24 கோடி செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 7 பயணங்களும், தற்போதைய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒரு பயணமும் (பிரிட்டன்) மேற்கொண்டுள்ளனா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை 86. இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.20.87 கோடி என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.