தில்லி கலால் கொள்கை மோசடியில் எட்டாவது நபரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.
தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் எட்டாவது நபர் ராஜேஷ் ஜோஷி என்பவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு விளம்பர நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்று அமலாக்கத் துறையினர் கூறியுள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட குற்றவாளி தினேஷ் அரோராவுடன் அவர் நெருங்கிய தொடர்புள்ளவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கோவா தேர்தலுக்காக ஜோஷி, அரோராவிடமிருந்து பணம் பெற்றார். இந்த பணம் கலால் கொள்கை ஊழலின் மூலம் வந்த வருமானம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜோஷி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை இரண்டு வாரக் காவலில் வைக்க வேண்டும் அமலாக்கத்துறை தெரிவித்தன.
முன்னதாக, பஞ்சாபைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் மல்ஹோத்ராவை புதன்கிழமை அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பிப்ரவரி 15 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட எட்டாவது நபரான ஜோஷி ஆவார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோனியால் உத்வேகம், 15 ஆண்டு வலி மிகுந்த காத்திருப்பு... மனம் திறந்த 33 வயதான அறிமுக வீரர்!
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


