இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நான் ஒன்றும் மந்திரவாதி இல்லை. நான் கேட்டவுடன் பணம் வானத்திலிருந்து வந்துவிடாது. சத்யஜித் ரே படத்தில் வானத்திலிருந்து சாக்லேட் வருவது போல் பணமெல்லாம் வராது. மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு நிதி அளிக்காதபோதும், நாங்கள் 3 சதவிகித அகவிலைப்படி உயர்வினை வழங்கியுள்ளோம். மாநிலத்தின் நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா நேற்று முன் தினம் (பிப்ரவரி 15) வெளியிட்ட பட்ஜெட்டில் அரசாங்கப் பணிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பிறருக்கும் 3 சதவிகித அகவிலைப்படி உயர்வினை அறிவித்தார்.