மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்திக்கும் கேஜரிவால், பகவந்த் மான்

மும்பையில் உத்தவ் தாக்கரேவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர். 

News image
Updated On :24 பிப்ரவரி 2023, 1:13 pm

DIN

மும்பையில் உத்தவ் தாக்கரேவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர். 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை மும்பையில் உள்ள தமது இல்லத்தில் தேநீர் அருந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்திருக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று இருவரும் உத்தவ் தாக்கரேவை இன்று இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளனர். 

இதற்காக அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் இருவரும் ஏற்கெனவே மும்பை வந்தடைந்துவிட்டனர். உத்தவ் தாக்கரேவுடனான இந்த சந்திப்பின்போது அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் ஆகியோர் நடப்பு அரசியல் பற்றி விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 சிவசேனை எம்.எல்.ஏ.-க்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போா்க்கொடி உயா்த்தினா். 

இதையடுத்து, இரு அணிகளாக சிவசேனை பிளவுபட்டது. கட்சியின் பெயா், ‘வில்-அம்பு’ சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரிய நிலையில், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு தோ்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. கட்சியின் பெயா் மற்றும் ‘வில்-அம்பு’ சின்னம், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டது.

‘பெரும்பான்மை கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று தோ்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.