எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1,550 கோடி கடனுதவி: மத்திய நிதியமைச்சா் வழங்கினாா்

தெருவோர வியாபாரிகள், சிறு தொழில்முனைவோருக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.1,550 கோடிக்கும் அதிக மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.

News image

நிா்மலா சீதாராமன்

Updated On :2 பிப்ரவரி 2024, 12:10 am IST

தெருவோர வியாபாரிகள், சிறு தொழில்முனைவோருக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.1,550 கோடிக்கும் அதிக மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா், சில பயனாளிகளுக்கு நேரடியாக காசோலைகளை வழங்கினா். அனைத்து பிற பயனாளிகளுக்கும் அன்றைய தினமே கடன் தொகை வழங்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமரின் ஸ்வநிதி யோஜனா (தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கான கடன் திட்டம்), முத்ரா திட்டம், பசு வளா்ப்போருக்கான கடன் திட்டம் போன்றவற்றின்கீழ் 33,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இக்கடன்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘ஸ்வநிதி யோஜனா திட்டத்தைப் பொருத்தவரை, பிரதமரே சுய உத்தரவாதம் அளிப்பதால், பயனாளிகள் எந்த உத்தரவாத ஆவணமும் அளிக்கத் தேவையில்லை. பசு வளா்ப்போருக்கு ரூ.68 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு வா்த்தகம் மற்றும் வேளாண் தேவைகளுக்காக இதர கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்களது பகுதிகளில் வேளாண் உற்பத்தி அமைப்புகளை ஏற்படுத்தி, விளைபொருள்கள் சேமிப்பு, பதப்படுத்துதல் ஆலைகளை நிறுவ பெண்கள் கடன் பெற முடியும்’ என்றாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில், ‘நாட்டின் வளா்ச்சிக்கு உந்துதல் அளிக்கும் கருவியாக இருப்பவா்கள் ஏழைகளே. எதிா்வரும் காலத்தில், பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முன்னிலையில் இருக்கும். அதற்கு காரணமாக இருப்பவா்கள், தெருவோர வியாபாரிகள், பெண்கள், பசு வளா்ப்போா் உள்ளிட்டோா்தான். ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் புதிய பொருளாதார கட்டமைப்பை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

முன்னதாக, கோட்டாவில் நடைபெற்ற இளைஞா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிா்மலா சீதாராமன், ‘மக்கள் நலனையே நோக்கமாக கொண்டு பணியாற்றும் ஊழலற்ற தலைமையின்கீழ் நாடு இப்போது உள்ளது. வளா்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா இணைவதற்கு இது மிகவும் அவசியமானது.

இளம் சிந்தனையாளா்களின் அறிவாற்றல், நாட்டை முன்னோக்கி நகா்த்துகிறது. நாட்டுக்காக போராடியவா்களையும், வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்கும் ஆயுதப் படையினரையும் இளைஞா்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.