எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நாளை சரத்பவார் பங்கேற்பார்!

பெங்களூருவில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நாளை பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சரத் பவார் (கோப்புப் படம்)
சரத் பவார் (கோப்புப் படம்)
Updated on
1 min read

பெங்களூருவில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நாளை பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், பெங்களூருவில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத் பவார் நாளை பங்கேற்பார் எனக் குறிப்பிட்டார். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய பாஜகவுக்கு எதிராக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு 16 கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com