அமர்நாத்தில் 3.30 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அமர்நாத்தில் 24 நாளில் 3.30 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கோயில் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

அமர்நாத்தில் 24 நாளில் 3.30 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கோயில் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் புனித யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது. 

இதனிடையே, 3,000 பேர் அடங்கிய பயணிகள் குழு இன்று காலை பகவதி நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அதில் 1,865 பேர் பஹல்காம் பாதையிலும், 1,160 பேர் பால்டால் வழியாகவும் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். 

அமர்நாத் யாத்திரை தொடங்கி இதுவரை 36 பேர் இறந்துள்ளனர். 62 நாள்கள் நடைபெறும் யாத்திரை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com