27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவனுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

ஞானபீடம் விருது பெற்ற கேரள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.

News image
Updated On :26 ஜூலை 2023, 6:11 pm IST


ஞானபீடம் விருது பெற்ற கேரள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.

பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர், கடந்த ஜூன் 15-ஆம் தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில், கேரளவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கோட்டக்கல்லில் இன்று எழுத்தாளர் வாசுதேவனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துப் பேசினார்.

Story image

இதுகுறித்து ராகுல் காந்தி முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

“கேரள மாநிலம், கோட்டக்கல்லில் நவீன மலையாள இலக்கியத்தின் பழம்பெரும் எழுத்தாளரும், ஞானபீடம் விருது பெற்றவருமான எம்.டி.வாசுதேவன் நாயரை சந்தித்தேன். அவரிடமிருந்து பரிசாக பெற்ற பேனாவை பொக்கிஷமாக கருதுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.