பிப்ரவரியில் 7.45 சதவிகிதமாக அதிகரித்த வேலையின்மை விகிதம் 

நாட்டில் பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.45 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிப்ரவரியில் 7.45 சதவிகிதமாக அதிகரித்த வேலையின்மை விகிதம் 

நாட்டில் பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.45 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பொருளாதார காண்காணிப்பு மையம் அவ்வப்போது நாட்டில் நிலவும் பொருளாதார நிலைகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் நிலவிய வேலையின்மை, பொருளாதார நிலைகள் குறித்த புள்ளி விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதில் நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் 8.55 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் பிப்ரவரி மாதம் சற்று குறைந்து 7.93 சதவிகிதமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே கிராமப்புற பகுதிகளில் 6.48 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் 7.23 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com