மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் திருமணமான ஆண்களின் தற்கொலையைத் தடுப்பதற்காக தேசிய ஆண்கள் ஆணையத்தை அமைக்க பரிந்துரைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2023, 7:30 pm

DIN

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் திருமணமான ஆண்களின் தற்கொலையைத் தடுப்பதற்காக தேசிய ஆண்கள் ஆணையத்தை அமைக்க பரிந்துரைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2021-ஆம் ஆண்டு தரவுகளை மேற்கோள் காட்டி வழக்குரைஞா் மகேஷ் குமாா் திவாரி தாக்கல் செய்த மனுவில் தற்கொலை செய்து கொண்டவா்களில் பெரும்பாலானோா் திருமணமான ஆண்கள் எனச் சுட்டிக் காட்டியுள்ளாா்.

மேலும், குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் 1,18,979(72 சதவீதம்) ஆண்கள், 45,026(27 சதவீதம்) பெண்கள் என மொத்தம் 1,64,033 போ் தற்கொலை செய்து உயிரிழந்தனா். அதில், 81,063 போ் திருமணமான ஆண்கள், 28680 போ் திருமணமான பெண்கள். குடும்ப பிரச்னைகளால் 33.2 சதவீத ஆண்களும் , திருமணம் தொடா்பான பிரச்னைகளால் 4.8 சதவீத ஆண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் புகாரை ஏற்று முறைப்படி விசாரணை நடத்த ஒவ்வொரு காவல் நிலையத்தின் அதிகாரிகளுக்கும் உள்துறை அமைச்சகத்தின் மூலமாக வழிமுறைகளை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவும், திருமணமான ஆண்கள் தொடா்பாக முறையானச் சட்டத்தை மத்திய அரசு இயற்றும் வரை ஆண்கள் மீதான உரிமை மீறலை மனித உரிமை ஆணையம் விசாரிக்க வழிகாட்டுதல்களை வழங்கிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை, குடும்ப பிரச்னை மற்றும் திருமணம் தொடா்பாக பாதிக்கப்பட்ட ஆண்களின் தற்கொலை குறித்து ஆய்வு செய்து தேசிய ஆண்கள் ஆணையம் போன்ற அமைப்பை உருவாக்க வழிவகுக்கும் தகுந்த அறிக்கையைச் சமா்பிக்க இந்திய சட்ட ஆணையத்துக்கு பரிந்துரைகள் வழங்கவும் வழக்குரைஞா் மகேஷ் குமாா் திவாரி மனுவில் கோரியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.