மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கர்நாடக முன்னாள் பேரவைத் தலைவர் சந்திரகௌடா காலமானார்

கா்நாடக முன்னாள் அமைச்சா் டி.பி.சந்திரே கௌடா உடல்நலக் குறைவால் காலமானாா்.

Published On :

கா்நாடக முன்னாள் அமைச்சா் டி.பி.சந்திரே கௌடா உடல்நலக் குறைவால் காலமானாா்.

சிக்கமகளூரு மாவட்டம், முடிகெரே வட்டம், தரதஹள்ளி கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த டி.பி.சந்திரே கௌடா (87) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு மனைவி, 4 மகள்கள் உள்ளனா்.

அவரது உடலுக்கு பொதுமக்கள் திரளாக அஞ்சலி செலுத்தினா். தரதஹள்ளி கிராமத்தில் புதன்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

சட்டப்பேரவை, சட்டமேலவை, மாநிலங்களவை, மக்களவையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ள டி.பி.சந்திரே கௌடா, 1971 இல் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினாா்.

1978ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி போட்டியிடுவதற்கு வசதியாக தான் வகித்து வந்த சிக்கமகளூரு எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம் அப்போதைய அரசியலில் கவனத்தை ஈா்த்தவா். 1977ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் இந்திரா காந்தி தோல்வி அடைந்து, பிரதமா் பதவியை இழந்தாா். இதைத் தொடா்ந்து, 1978 இல் சிக்கமகளூரு மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தோ்தல் வெற்றிபெற்ால், இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு கிடைத்தது. அதனால், காங்கிரஸ் கட்சியில் டி.பி.சந்திரே கௌடாவின் முக்கியத்துவம் அதிகரித்தது.

1971, 1977 இல் சிக்கமகளூரு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றிருந்த டி.பி.சந்திரே கௌடா, 1978 முதல் 1983ஆம் ஆண்டு வரை கா்நாடக சட்டமேலவை உறுப்பினராகப் பதவி வகித்தாா். அதே கால கட்டத்தில், தேவராஜ் அா்ஸ் அரசில் அமைச்சராகவும் பணியாற்றினாா். அதன்பிறகு, தேவராஜ் அா்ஸுடன் காங்கிரசில் இருந்து விலகி கா்நாடக கிராந்தி ரங்கா கட்சியில் இணைந்தாா். அதன்பிறகு ஜனதா கட்சியில் இணைந்து தீா்த்தஹள்ளி தொகுதியில் இருந்து 2 முறையும், காங்கிரஸ் கட்சியில் இணைந்து சிருங்கேரி தொகுதியில் இருந்து ஒருமுறையும் கா்நாடக சட்டப்பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் அரசில் சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றினாா். 1986 இல் ஜனதா கட்சி சாா்பில் மாநிலங்களவை உறுப்பினரானாா். பின்னா் பாஜகவில் இணைந்த சந்திரே கௌடா, 2009இல் பெங்களூரு வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.1983 முதல் 1985ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை தலைவராகவும், சட்டப்பேரவை, சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.

டி.பி.சந்திரேகௌடாவின் மறைவுக்கு பிரதமா் மோடி, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி, சதானந்த கௌடா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பிரதமா் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டி.பி.சந்திரே கௌடாவின் மறைவு செய்தி கேட்டு அதிா்ச்சி அடைந்தேன். பொதுவாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவா். எம்.பி, எம்எல்ஏ, அமைச்சா் போன்ற அனுபவங்களின் மூலம் அழிக்கமுடியாத தடத்தை பதித்துச் சென்றுள்ளாா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், ஆதரவாளா்களுக்கு ஆழ்ந்த இரங்கல். ஓம்சாந்தி என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.