ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்துள்ளது பாஜக: கமல்நாத் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக நகலெடுத்துள்ளதாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார். 

News image
Updated On :12 நவம்பர் 2023, 10:40 pm IST

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக நகலெடுத்துள்ளதாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார். 

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து ஞாயிற்றுக்கிழமை பேசிய கமல்நாத், “தேர்தலின் கடைசி கட்டத்தில் பாஜகவினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் இல்லை, காங்கிரஸ் செய்வதை அப்படியே நகல் எடுத்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். 

முன்னதாக, நவம்.11 அன்று போபாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்துதல், அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் வழங்குதல், மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் எண்ணெய் வழங்குதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

இதுகுறித்து பேசிய பாஜக பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா, “பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது. குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை உறுதி செய்யப்படும்.” என்று கூறினார். 

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு நவம்பர் 17-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 114 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பாஜக 109 தொகுதிகளில் மட்டும் வெற்றியடைந்தது. அதன்பின் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிற்கு வந்தநிலையில் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.