மொபைல் போனுக்கு அடிமையான மகனைக் கொன்ற தந்தை!

கர்நாடகம் மைசூரு மாவட்டத்தில் மொபைல் போனுக்கு அடிமையான தனது மகனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கர்நாடகம் மைசூரு மாவட்டத்தில் மொபைல் போனுக்கு அடிமையான தனது மகனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் மைசூர் பன்னிமண்டபப் பகுதியில் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர் உமைஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அஸ்லாம் பாஷைவை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், 

உமைஸ் தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தி வருவதை தந்தை அஸ்லம் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, நவ.29-ம் தேதி புதன்கிழமை மீண்டும் மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பாக இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த அஸ்லாம் திடீரென கத்தியை எடுத்து மகனைக் குத்தியுள்ளார். 

படுகாயமடைந்த உமைஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com