நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகில் நிதாரி பகுதியிலுள்ள ஒரு பங்களாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு குழந்தைகள் உள்பட 19 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணையில் சிறுமிகள், இளம்பெண் உள்ளிட்ட 19 பேரையும் பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பங்களாவின் உரிமையாளர் மொனீந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் சுரேந்திர கோஹ்லி என்பரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் மொனீந்தர் சிங்கிற்கும், கோஹ்லிக்கும் மரண தண்டனை வழங்கி கடந்த 2007-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், நிதாரி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இருவரின் மரண தண்டனையும் ரத்து செய்து விடுதலை செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா மற்றும் எஸ்.எச்.ஏ.ரிஸ்வி ஆகியோர் அமர்வு, குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சமர்பிக்காததால் அவர்களை விடுவிப்பதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பேல்பூரி

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்: டிரம்புக்கு கமல் கடிதம்!
டெக்ஸ்லா முதல் தோற்ற போஸ்டர்!
மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

