வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சாலையோர உணவகத்தில் தோசை சுட்ட ராகுல்

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, சாலையோர உணவகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோசை சுட்டு மகிழ்ந்தார்.

News image

தோசை சுட்ட ராகுல்

Updated On :20 அக்டோபர் 2023, 3:00 pm IST

 
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, சாலையோர உணவகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோசை சுட்டு மகிழ்ந்தார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த இரண்டு நாள்களாக ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து அவர்களது குறைகளையும் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று ஊடகங்களில் வெளியான விடியோவில், சாலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுல், அங்கிருந்த சாலையோர உணவகத்துக்குள் நுழைந்தார். அங்கு ஏற்கனவே சமையல்காரர் தோசை சுட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்த ராகுல், அவருடன் சேர்ந்து தோசை சுடத் தொடங்கினார்.

Story image

ஒரு பாத்திரத்தில் இருந்த மாவை, தோசைக் கல் மீது ஊற்றி தோசை சுட்டார். அருகில் பெரிய கடாயிலிருந்து எண்ணெய் எடுத்து தோசையில் ஊற்றினார். அருகில் இருந்த சமையல்காரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளும், ராகுல் காந்தி தோசை சுடுவதற்கு ஊக்கப்படுத்தி உற்சாகம் அளித்தனர்.

தோசை சுடுவதோடு விட்டுவிடாமல், தோசை மீது, தன் கையாலேயே மசாலாப் பொடியை எடுத்து தூவி கமகமவென ஒரு அருமையான மசாலா தோசையை சுட்டெடுத்தார் ராகுல் காந்தி.

இந்த புகைப்படங்களும், விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தெலங்கானாவில் இன்று மூன்றாவது நாளாக ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும்.

மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, நீங்கள் எல்லோரும் தெலங்கானாவை ஜனநாயகம் ஆட்சி செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், தெலங்கானா உருவானபோது, ஒரே ஒரு குடும்பம்தான், ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஆண்டுகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.