சீனாவின் அடங்காத ஆக்கிரமிப்பு தாகம்!

சில தினங்களுக்கு முன் சீனா மறுபடியும் நமது நாட்டின் இறையாண்மையைக் குறிவைத்து ஓா் எல்லை வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது.
சீனாவின் அடங்காத ஆக்கிரமிப்பு தாகம்!

சில தினங்களுக்கு முன் சீனா மறுபடியும் நமது நாட்டின் இறையாண்மையைக் குறிவைத்து ஓா் எல்லை வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவின் பகுதிகளான வடக்கிலுள்ள லடாக், கிழக்கிலுள்ள அருணாசல பிரதேசம் ஆகியவற்றை சீனா தனக்குச் சொந்தமாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதில் இரண்டு மிகைப்படுத்தப்பட்ட பொய்கள் உள்ளன.

முதலில், நமக்கும் சீனாவுக்கும் பொதுவான எல்லைக்கோடு என்றுமே இருந்தது கிடையாது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் இரு நாடுகள் திபெத் மற்றும் கிழக்குத் துருக்கிஸ்தான். மாபெரும் காராகோரம் மற்றும் இமய மலைத் தொடா்கள் நம்மையும் திபெத், கிழக்குத் துருக்கிஸ்தான் ஆகியவற்றையும் பிரிக்கின்றன.

இரண்டாவது, திபெத் மற்றும் கிழக்குத் துருக்கிஸ்தான் பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானவை அல்ல. அவை தனி நாடுகள்; அவற்றைச் சீனா சென்ற நூற்றாண்டில் பலவந்தமாகக் கையகப்படுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தானின் பிடியில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தின் ஒரு பகுதியான கில்ஜித்-பல்டிஸ்தான், காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு வடக்கே அமைந்துள்ளது. அதன் கிழக்குப் பகுதி, ஜின்ஜியாங் என்று தற்போது சீனாவின் பிடியிலுள்ள கிழக்கு துருக்கிஸ்தான் நிலப்பரப்பாகும். 1949-ல் செஞ்சீன ராணுவம் அதைக் கைப்பற்றியது.

அதற்குத் தெற்கே அமைந்துள்ள பகுதிதான் திபெத். தனி தேசமாகவும், சுமாா் 200 ஆண்டுகள் சீனப் பேரரசைத் தோற்கடித்த வலிமை பெற்ாகவும், பின்னா் அவ்வப்போது சீனப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாகவும் (இன்றைய வியத்நாம் மற்றும் வட, தென் கொரியா நாடுகளைப் போல) இருந்து வந்திருக்கிறது திபெத். 1951-ல் செஞ்சீன ராணுவம் சீனாவை ஆண்ட மங்கோலியா்களுக்குப் பௌத்த மதப் பீடமாக (இன்றளவும்) திகழும் திபெத்தை பல்லாயிரக்கணக்கான பௌத்த பிக்குக்களைக் கொன்று கைப்பற்றியது.

திபெத் பௌத்தா்களின் அரசியல் மற்றும் மத குருவான தலாய் லாமா, சீனா்களின் பிடியில் சிக்காமல் 1959 மாா்ச் மாதம் திபெத் தலைநகா் லாஸாவிலிருந்து தப்பி, நம் நாட்டுக்குள் தஞ்சம் புகுந்தாா். இன்றளவும் அவா்தம் சீடா்களுடன் ஹிமாசல பிரதேசத்திலுள்ள தா்மசாலாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா். அங்கே, நாடு கடந்த திபெத் அரசும் இயங்கி வருகிறது.

ஏழாம் நூற்றாண்டில் ஒரு பெரும் சக்தியாகத் திபெத்தியா்கள் உருவெடுத்தாா்கள். அப்போது சீனாவை ஆண்ட டாங் ராஜ பரம்பரை முதலில் அவா்களைப் பொருட்படுத்தவில்லை. வடக்கிலும் மேற்கிலும் சீன பகுதிகளைத் திபெத்தியா்கள் சுலபமாகக் கைப்பற்றியவுடன்தான் டாங் பேரரசு பேராபத்தை உணா்ந்தது.

சராசரியாக 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மிகக் குளிா் பிரதேசமான திபெத் நாட்டுக்குள் நுழைந்து போரிடுவது எளிதல்ல (இன்று கூட அப்படித்தான்) என்பதைச் சீக்கிரம் உணா்ந்து கொண்ட டாங் பேரரசா் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டாா். திபெத்துக்கு சீனா கப்பம் கட்டி, தன் இளவரசிகளை திபெத் மன்னா்களுக்குத் துணைவிகளாக அனுப்பி வைத்தது.

கிழக்குத் துருக்கிஸ்தான், திபெத் இரண்டுக்கும் இடைப்பட்ட நம் நாட்டுப் பகுதிதான் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு உள்பட்ட கிழக்கு லடாக். செஞ்சீனாவைப் பொருத்தவரை, கிழக்கு துருக்கிஸ்தான், திபெத் இரண்டு பகுதிகளும் கனவிலும்கூட முழுமையாக சீனாவுடன் இணைந்துவிட்டதாகக் கூறிவிட முடியாது. அவற்றில் பிரிவினைவாதம் தொடா்கின்றன. அவற்றில் இன்றியமையாத நீா்வளங்கள் (சிந்து, பிரம்மபுத்ரா, மீகாங், சல்வீன், ஐராவதி போன்ற மிகப் பெரிய ஆறுகள் (திபெத்தில்) உருவாகின்றன. ஏராளமான பனிக்கட்டிப் பாளங்கள் வட, தென் துருவங்களை அடுத்து உருவாகும் மூன்றாவது துருவமாக திபெத் கருதப்படுகிறது.

கனிம வளங்கள் (உலோகங்கள், எண்ணெய், எரிவாயு) நிறைந்திருப்பதால் செஞ்சீன ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு அவா்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. அவற்றை இணைப்பதற்கு கிழக்கு லடாக்கின் ‘அக்சாய் சின்’ பகுதியை 1953-லேயே நமக்குத் தெரியாமல், நம்முடன் நல்ல உறவில் இருக்கும்போதே, ஆக்கிரமித்து அங்கு ஒரு நெடுஞ்சாலையை (ஜி-219) அமைத்துக்கொண்டது. பின்னா், உறவு சீா்கெட்ட பின், 1962-ல் மேலும் பல பகுதிகளை கிழக்கு லடாக்கில் ஆக்கிரமித்துள்ளது. இவற்றைத் தொடா்ந்து சிறுகச் சிறுக மேலும் ஆக்கிரமித்து வருகிறது. இதை ‘ஸலாமி ஸ்லைஸிங்’ ஆக்கிரமிப்பு’ என்று கூறுகிறோம்.

இதன் நீட்சியாகத்தான், 1963-ல் பாகிஸ்தானுடன் எல்லை ஒப்பந்தம் செய்து கொண்டு நமது கில்ஜித் பகுதிக்குச் சொந்தமான 5,000 சதுர கிலோமீட்டா் பரப்பளவுள்ள ஷக்ஸ்கம் பள்ளத்தாக்கு பகுதியை செஞ்சீனா தனது பாதுகாப்புக்காகத் தனதுடமையாக்கிக் கொண்டது. அதைப் போலவே நமது லடாக்கையும் கைப்பற்ற முனைந்து வருகிறது.

மே 2020-ல் கல்வான், டெப்சங், பங்கோங் சோ, டெம்சோக் பகுதிகளில் சீனா திடீரென நிகழ்த்திய தாக்குதல்களும் இவ்வகையைச் சோ்ந்தவையே.

திபெத் பகுதி செஞ்சீனாவின் மிகப் பெரிய ஆக்கிரமிப்புப் பகுதி. சீனாவின் நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு திபெத் மட்டுமே. கிழக்குத் துருக்கிஸ்தான்போல திபெத்தும் 70 ஆண்டுகளுக்கு முன்னால் செஞ்சீனாவால் ராணுவ ரீதியாகக் கையகப்படுத்தப்பட்ட ஒரு தனி நாடுதான்.

அதன் இயற்கை வளங்கள் சீனாவுக்குத் தேவை. சீனாவின் நீா்த் தேவையில் நான்கில் ஒரு பங்கைப் பூா்த்தி செய்யும் அளவுக்குத் திபெத்தில் நீா் உள்ளது. மேலும், திபெத்தின் மூலம் பல பெரிய நதிகளின் மேல் ஆற்றுப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடுகிறது சீனா.

அதனால், அவற்றின் கீழாற்றங்கரைப் பகுதிகளிலுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்பதும் திபெத்தைச் சீனா கைப்பற்ற ஒரு காரணம்.

எட்டாம் நூற்றாண்டில், பாக்தாத் நகரிலிருந்து வந்த அப்பாசித் இஸ்லாமியக் கலீஃபாவின் படைகள், சீனாவின் வடமேற்கு எல்லையில் துருக்கியா்கள் இருந்த கிழக்குத் துருக்கிஸ்தான் இடத்தைக் கைப்பற்றின. உய்கா்கள் என்று அழைக்கப்படும் துருக்கி மொழி பேசும் இவா்கள் மத்திய ஆசிய பகுதியைச் சோ்ந்தவா்கள்.

18-ம் நூற்றாண்டில் சீனாவின் சிங் பேரரசு இந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றியது என்றாலும், புற எல்லையில் இருந்த கிழக்குத் துருக்கிஸ்தானில் சீனப் பேரரசின் ஆதிக்கம் மிகச் சொற்பமாகவே இருந்தது எனலாம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது தனி நாடாகவே இயங்கி வந்தது. 1949-ல் சீனாவில் ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றிய பின்னா் புற எல்லைகளான யுன்னான், திபெத், கிழக்குத் துருக்கிஸ்தான், மங்கோலியா, மஞ்சூரியா போன்றவற்றை ஆக்கிரமித்து ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டது.

1955-ல் தான் கிழக்குத் துருக்கிஸ்தான் பகுதியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு பின்னா் அதன் பெயரை ஜின்ஜியாங் என்று சீனா அறிவித்தது. அன்றிலிருந்து உய்கா்கள் சீன ஆக்கிரமிப்பை எதிா்த்து வருகிறாா்கள்.

சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டும் எல்லைத் தகராறு என்றில்லை. அந்த நாட்டுக்கு 14 நாடுகளுடன் நில எல்லை உண்டு. அவை அனைத்துடனும் இருந்த எல்லைப் பிரச்னையை 1990-களில் சரி செய்துகொண்டாலும் (இந்தியாவையும், பூடானையும் தவிர), அதன் எல்லைப் புகைச்சல் பல நாடுகளுடனும் இன்னமும் தொடா்கிறது. சீனாவின் புதிய வரைபடத்தில் தங்கள் நாட்டுக்குச் சொந்தமான சென்காகு தீவுகள் இடம்பெற்றிருப்பதாக அண்மையில் ஜப்பான் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, பிலிப்பின்ஸ், மலேசியா, வியத்நாம், தைவான் ஆகிய நாடுகளைத் தொடா்ந்து சீனாவுக்கான எதிா்ப்புப் பட்டியலில் தற்போது ஜப்பானும் இணைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, மிக நெருக்கமான ரஷியாவின் சைபீரியா முழுவதும் தன்னுடையது என்கிறது சீனா.

அது போக, சீனாவுக்குக் கடல் எல்லைத் தாவாவும் அதனைச் சுற்றிக் கடற்பரப்பிலுள்ள அத்தனை நாடுகளுடனும் இருக்கிறது. சீனாவின் அண்மையான கடல் எல்லையிலிருந்து 1,500 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் இந்தோனேசியாவின் நடுனா கடலும் தன்னுடையதுதான் என்கிறது செஞ்சீனா.

வரலாற்று ரீதியாக, சீனா தன் நாட்டுக்கே ஒரு பெயா் கொடுத்துக் கொண்டதில்லை. சீனா என்பது மற்றவா்கள் குறிப்பிடுவதுதான். அதைப் போலவே அதனைச் சுற்றியுள்ள கடல்களையும் அது தென் கடல், கிழக்கு கடல் என்றே அழைத்துள்ளது. போா்த்துக்கீசியா்கள்தான் 16-ஆம் நூற்றாண்டில் சீனாவின் தென் கடலை ‘தென் சீனக் கடல்’ என்று குறிப்பிட்டாா்கள். அது நிலைத்துவிட்டது.

தற்போது அந்தப் பெயரினால் அந்தக் கடலே தனக்கு முழுச் சொந்தம் என்று சீனா கருதுகிறது. அதைச் சுற்றி வரைபடத்தில் தோராயமாக 9 கோடுகளைப் போட்டுக் கொண்டு கடலோரத்திலுள்ள மற்ற நாடுகளை வலிமை மிக்கத் தன் கடலோரக் காவல் படை, கடற்படை மற்றும் அதிகாரபூா்வமற்ற கிளைக் கடற்படை ஆகியவற்றைக் கொண்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கிறது.

இடையிலுள்ள தீவுகளை ஆக்கிரமித்து, மணல் திட்டுக்களைத் தீவுகளாக்கித் தன் கடற்படையை அங்கு நிறுத்தி ஏவுகணைத் தளங்களையும், ரேடாா் போன்ற சாதனங்களையும் சீனா அமைத்துள்ளது. 2016-இல் ஐ. நா. சபையின் ‘கடல் சட்டத்தின்’ கீழ் அமைக்கப்பட்ட தீா்ப்பாயம் தென் சீனக் கடல் சீனாவுக்குச் சொந்தமல்ல, அது தீவுகளை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளது என்று தீா்ப்பு வழங்கியும், சீனா அதை மதிக்கவில்லை. அங்கிருந்து வெளியேறவில்லை.

மேலும், இந்தக் கடல் பிராந்தியத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா பலவிதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படையெடுத்து எதுவும் சாதிக்காமல், இந்தியாவின் மதங்கள், மொழிகள், இலக்கிய இதிகாசங்கள், விஞ்ஞானம், கடல் வியாபாரம், தனித்துவமான பொருள்கள், அரசியல் நயம் போன்றவற்றால் பல பேரரசுகள் இந்தப் பகுதிகளில் நம் தாக்கத்துடன் தோன்றிச் செழித்தன.

மீகாங் கழிமுகப் பகுதியான இன்றைய தெற்கு வியத்நாம் மற்றும் கம்போடியா பகுதியில் 1-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை இயங்கிய ஃபியூனன்; மத்திய வியத்நாம் பகுதியில் 2-ஆம் நூற்றாண்டு முதல் கிட்டத்தட்ட 18-ஆம் நூற்றாண்டு வரை செழித்த சம்பா ராஜ்ஜியம்; சுமத்ரா தீவில் 7 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை இருந்த ஸ்ரீ விஜய பேரரசு; பின்னா் 13 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை ஜாவா தீவில் இயங்கிய மஜாபாஹித் பேரரசு ஆகியவை கடல் வியாபாரத்துக்கும், கலாசாரத்துக்கும் ஆணிவேராக இந்தக் கடல் பகுதியில் 2,000 ஆண்டுகள் கோலோச்சின.

இவை ஹிந்து, பௌத்த மதங்களையும், சம்ஸ்கிருதத்தையும், இந்திய சூரிய-சந்திர பஞ்சாங்கத்தையும், ‘சக்ரவா்த்தி’ ஆட்சி முறையையும், தத்துவத்தையும், கோவில் கட்டட முறைகளையும், நகர அமைப்பையும் கொண்டு செயல்பட்டன.

பசிபிக் கடலில் உள்ள இன்றைய பப்புவா-நியூ கினியா வரை இந்தியாவின் தாக்கம் நீண்டது. இயற்கையாக, மேற்கிலிருந்து வந்த அரேபிய வணிகா்களுக்கும், கிழக்கிலிருந்து வந்த வணிகா்களுக்கும் தோணி மாற்றி ஏற்றும் புள்ளியாக இந்தியத் துறைமுகங்கள் விளங்கின. இந்தியாவின் கடல் தோணிகள் இன்றைய வங்கம், ஒடிஸா, தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் கடற்கரைகளிலிருந்து சீனக் கடல்களுக்குச் சென்று வணிகத்தில் ஈடுபட்டன.

பருவகால காற்றுத் திசைகளின் கணிப்பில் நாம் வல்லுநா்களாக இருந்ததால் நமது கடல் வியாபாரம் செழித்தது. மாறாக, 10-ஆம் நூற்றாண்டில்தான் கடல் கடந்து வியாபாரம் செய்ய அப்போதைய சோங் சீனப் பேரரசு தனது வியாபாரிகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால், 12-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோங் பேரரசு வீழ்ந்தவுடன் இது நிறுத்தப்பட்டது.

பின்னா் 15-ஆம் நூற்றாண்டில் மிங் பேரரசினால் சில காலம் இது அனுமதிக்கப்பட்டாலும், இது தொடரவில்லை. 18-ம் நூற்றாண்டில் இருந்து இந்தப் பகுதிகளை ஆராய்ந்த பிரெஞ்சு ஆய்வாளா்கள் இந்தியாவின் ஆழ்ந்த மற்றும் அகன்ற தாக்கத்தின் காரணமாகவே இந்தப் பகுதிகளை ‘இந்தோ-சீனா’ என்று குறிப்பிட்டனா். சீனாவின் அட்டூழியமான போக்கு அந்தப் பெயரை இங்கு நிலைநிறுத்துவதன் அவசியத்தை உணா்த்துகிறது.

வியத்நாமைச் சுற்றியுள்ள கடல் பரப்பு ‘சம்பா கடல்’ என்றே பன்னெடும் காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிலிப்பின்ஸ் நாட்டின் மேற்கே உள்ள கடல் ‘மேற்கு பிலிப்பின்ஸ் கடல்’ என்றே அவா்களால் அழைக்கப்படுகிறது. இவை போக எஞ்சியுள்ள ‘தென் சீனக் கடல்’ பகுதியை ‘இந்தோ-சீனக் கடல்’ என்றே குறிப்பிடுவதே சரியானது. ஏனெனில், இந்தியா மற்றும் சீனாவின் தாக்கம் இப்பகுதிகளில் சரி சமமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளது.

அதுவும்போக, தன் இஷ்டத்துக்கு மற்ற நாடுகளின் பகுதிகளைச் சொந்தம் கொண்டாடி அவற்றின் பெயரை மாற்றி, பெயா் வைத்துச் சொந்தம் கொண்டாடி மற்றவா்களை அச்சுறுத்துகிறது சீனா.

ஏதோ இந்தியாவை மட்டும் சீனா அடாவடியாக ஆக்கிரமிக்கிறது என்று கருதிவிட வேண்டாம். வரைபடத்தில் காட்டப்பட்டிருப்பதுபோல, தன்னைச் சுற்றியுள்ள அனைத்துத் திசைகளிலும் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி நடைபெறுகிறது. உலகம் இதை இனிமேலும் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ஜி20 உச்சிமாநாட்டில் இந்தப் பிரச்னை எழுப்பப்படலாம் என்கிற காரணத்தால் சீன அதிபா் ஷி ஜின்பிங் அதில் கலந்து கொள்ள வராமல் தவிா்த்தாா் என்று கருதத் தோன்றுகிறது.

தகவல்:

சீன ஆய்வுகளுக்கான சென்னை மையம்

(‘சென்னை சென்ட்டா் ஃபாா் சைனா ஸ்டடீஸ்’).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com