வடமேற்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடமேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதன்காரணமாக, ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.