தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருந்து நிறுவனத்தில் திடீர் விபத்து: 4 பேர் பலி!

தெலங்கானா மருந்து நிறுவன வெடி விபத்து: 4 பேர் பலி, பலர் காயம்

News image
மாதிரி படம்
Updated On :3 ஏப்ரல் 2024, 2:45 pm

DIN

தெலங்கானா சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 10-க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

மாலை 5 மணி போல இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

மருந்து கம்பெனியில் உலை வெடித்ததில் இயந்திரத்துக்கு அருகில் பணிபுரிந்திருந்து கொண்டிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். அதனால் 4 பேர் உயிரிழந்தனர். 10 முதல் 15 பேர் வரை காயமுற்றிருக்கலாம். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.