இந்தியா
மருந்து நிறுவனத்தில் திடீர் விபத்து: 4 பேர் பலி!
தெலங்கானா மருந்து நிறுவன வெடி விபத்து: 4 பேர் பலி, பலர் காயம்
தெலங்கானா சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 10-க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
மாலை 5 மணி போல இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
மருந்து கம்பெனியில் உலை வெடித்ததில் இயந்திரத்துக்கு அருகில் பணிபுரிந்திருந்து கொண்டிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். அதனால் 4 பேர் உயிரிழந்தனர். 10 முதல் 15 பேர் வரை காயமுற்றிருக்கலாம். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.