மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மருந்து நிறுவனத்தில் திடீர் விபத்து: 4 பேர் பலி!

தெலங்கானா மருந்து நிறுவன வெடி விபத்து: 4 பேர் பலி, பலர் காயம்

News image

மாதிரி படம்

Updated On :3 ஏப்ரல் 2024, 2:45 pm

தெலங்கானா சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 10-க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

மாலை 5 மணி போல இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

மருந்து கம்பெனியில் உலை வெடித்ததில் இயந்திரத்துக்கு அருகில் பணிபுரிந்திருந்து கொண்டிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். அதனால் 4 பேர் உயிரிழந்தனர். 10 முதல் 15 பேர் வரை காயமுற்றிருக்கலாம். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.