மாதிரி படம்
மாதிரி படம்

மருந்து நிறுவனத்தில் திடீர் விபத்து: 4 பேர் பலி!

தெலங்கானா மருந்து நிறுவன வெடி விபத்து: 4 பேர் பலி, பலர் காயம்

தெலங்கானா சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 10-க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

மாலை 5 மணி போல இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

மருந்து கம்பெனியில் உலை வெடித்ததில் இயந்திரத்துக்கு அருகில் பணிபுரிந்திருந்து கொண்டிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். அதனால் 4 பேர் உயிரிழந்தனர். 10 முதல் 15 பேர் வரை காயமுற்றிருக்கலாம். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com