ஷில்லாங் நகரில் காவல் வாகனத்துக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.
மாவ்லாய் காவல் நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவு, இந்த தீ வைப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவல் நிலைய வளாகத்துக்கு உள்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம், நள்ளிரவு 2 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக காவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.