
ஷில்லாங் நகரில் காவல் வாகனத்துக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.
மாவ்லாய் காவல் நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவு, இந்த தீ வைப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவல் நிலைய வளாகத்துக்கு உள்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம், நள்ளிரவு 2 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக காவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.