காவல் வாகனத்துக்கு தீ வைப்பு!

காவல் நிலையத்தில் பரபரப்பு: மர்ம நபர்களின் பயங்கர செயல்
மாதிரி படம்
மாதிரி படம்ஐஏஎன்எஸ்

ஷில்லாங் நகரில் காவல் வாகனத்துக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

மாவ்லாய் காவல் நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவு, இந்த தீ வைப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காவல் நிலைய வளாகத்துக்கு உள்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம், நள்ளிரவு 2 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக காவலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com