டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பாலியல் வழக்கு விசாரணையில் அத்துமீறல்: நீதித்துறை நடுவா் மீது வழக்குப் பதிவு

பாலியல் வழக்கு விசாரணையில் அத்துமீறல் நீதித்துறை நடுவா் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :3 ஏப்ரல் 2024, 8:50 pm

Din

பாலியல் வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காயங்களைக் காண்பிக்குமாறு கூறி அத்துமீறிய புகாரில் ராஜஸ்தான் மாநிலம் கரெளலி மாவட்ட நீதித்துறை நடுவா் (மாஜிஸ்திரேட்) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து கரெளலி மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மீனா கூறியதாவது: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு கரெளலி மாவட்ட ஹிந்தெளன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆடைகளைக் கழற்றி காயங்களைக் காண்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

அதற்கு அந்தப் பெண் மறுத்துள்ளாா். நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தபிறகு, மாஜிஸ்திரேட்டுக்கு எதிராக அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகாரைப் பதிவு செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பெண்ணின் மாண்பை பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் என்ற இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் மாஜிஸ்திரேட் மீது கோட்வாலி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.