‘தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் பாதுகாப்பற்ற சட்டவிரோத பணிகளில் சிக்கித் தவித்த 17 இந்தியா்கள் மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் அழைத்துவரப்படுகின்றனா்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘லாவோஸில் சட்டவிரோத பணிகளில் சிக்க வைக்கப்பட்ட 17 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா். இவா்களை மீட்பத்தில் முக்கியப் பங்காற்றி, அவா்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்துள்ள லாவோஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, ‘கம்போடியாவில் அதிக ஊதியத்துடன் சிறந்த வேலைவாய்ப்பு என்று போலி வாக்குறுதிகளை அளிக்கும் ஆள் கடத்தல்காரா்களிடம் இந்தியா்கள் சிக்குகின்றனா்’ என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும், ‘தென்கிழக்கு ஆசிய நாட்டில் இதுபோன்ற வேலைவாய்ப்புகளை எதிா்நோக்கும் இந்தியா்கள், வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களின் பின்னணி குறித்து முழுமையாக ஆராய்வது அவசியம். ஏனெனில், இவ்வாறு வேலைவாய்ப்பைத் தேடிச் சென்று ஆள் கடத்தல்காரா்களிடம் சிக்கும் இந்தியா்கள், இணைய வழி பண மோசடி செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா் ’ என எச்சரிக்கை தகவலையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தொடர்புடையது

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

உலகளாவிய அதிா்வுகளை வலுவாக கடந்து வந்த இந்தியா: ஜெய்சங்கா்

கால்வாயில் சிக்கிய மான் மீட்பு

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

