மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பாலின மாற்று அறுவை சிகிச்சை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய அரசு மற்றும் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையம் (சிஏஆா்ஏ) மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

News image
Updated On :8 ஏப்ரல் 2024, 9:00 pm

புது தில்லி: ஒழுங்குபடுத்தப்படாத பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் மூன்றாம் பாலின குழந்தைகளின் நலனைக் காக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையம் (சிஏஆா்ஏ) மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த எம்.கோபி சங்கா் என்பவா் இந்த மனுவை தாக்கல் செய்தாா். ‘இத்தகைய மூன்றாம் பாலினத்தவா்கள் வாக்காளா்களாகவும் அங்கீகரிக்கப்படுவதில்லை’ என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஒழுங்குபடுத்தப்படாத பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் மூன்றாம் பாலின குழந்தைகளை நலனைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இத்தகைய பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகள் மற்ற நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது’ என்றாா்.

இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா், சிஏஆா்ஏ உள்ளிட்ட அமைப்புகளை எதிா் மனுதாரா்களாக மனுதாரா் சோ்த்திருந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு உள்பட எதிா் மனுதாரா்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.