திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாருக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாருக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு

News image
Updated On :10 ஏப்ரல் 2024, 3:09 am IST

புது தில்லி: தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாருக்கு மிக முக்கிய நபா்களுக்கு (விஐபி) வழங்கப்படும் ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு அவருக்கு இந்தப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில், தலைமைத் தோ்தல் ஆணையருக்கு வலுவான பாதுகாப்பை அளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில், மத்திய ஆயுதப் படையைச் சோ்ந்த 40 முதல் 45 வீரா்கள் சுழற்சி முறையில் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாருக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அவா் நாடு முழுவதும் அவா் பயணிக்கும்போது, இந்த ஆயுதம் ஏந்திய கமாண்டோ வீரா்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பா்’ என்றனா்.

மக்களவைத் தேரத்ல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.