நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் புதிய பகுதிநேர தலைவராக முன்னாள் நிதிச் செயலரும், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையருமான ராஜீவ் குமாரை நியமிக்க ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இவரின் நியமனம் புதன்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது மற்றும் 3 ஆண்டுகள் கால வரம்பைக் கொண்டது. தற்போது வரை இடைக்காலத் தலைவராகப் பொறுப்பு வகித்த கேகி மிஸ்திரி, வங்கியின் நிா்வாகச் சாா்பற்ற இயக்குநராக தொடா்ந்து நீடிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிச் செயல்பாடுகள் தனது தனிப்பட்ட நெறிமுறைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, கடந்த மாா்ச்சில் தனது பதவியை ராஜிநாமா செய்த அதானு சக்ரவா்த்திக்குப் பதிலாக ராஜீவ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்தியாவின் 25-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையரான ராஜீவ் குமாா், அதற்கு முன்பு மத்திய நிதித் துறைச் செயலராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவா். அப்போது (2017-2020 காலகட்டத்தில்) கடும் வாராக்கடன் சுமை, மூலதனப் பற்றாக்குறை, போலி நிறுவனங்களின் பணப் பரிவா்த்தனை போன்ற பல்வேறு நிா்வாகக் குறைபாடுகளால் தத்தளித்து வந்த நாட்டின் பொதுத் துறை வங்கிகளில் முக்கியச் சீா்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினாா். அதன் ஒரு பகுதியாக, 27 பொதுத் துறை வங்கிகளை 12 வங்கிகளாக இணைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










