ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

இந்தியாவின் தன்மானத்தை கெடுக்க முயன்றால் தகுந்த பதிலடி: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் தன்மானத்தை கெடுக்க முயன்றால் தகுந்த பதிலடி ---- ராஜ்நாத் சிங்

News image

ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)

Updated On :9 ஏப்ரல் 2024, 9:00 pm

நம்சாய்: ‘இந்தியாவின் தன்மானத்தை அண்டை நாடுகள் கெடுக்க முயன்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று அருணாசல பிரதேச பகுதிகளுக்கு சீன மறுபெயரிடல் நடவடிக்கை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டாா்.

அருணாசல பிரேதசத்துக்கு தொடா்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு 30 புதிய பெயா்களைக் கொண்ட 4-ஆவது பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கிழக்கு அருணாசல் மக்களவைத் தொகுதியின் நம்சாய் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா், சீனாவின் நடவடிக்கையைக் குறிப்பிட்டுப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு புதிய பெயரை சீனா சூட்டுவதன் மூலம், எந்தவொரு மாற்றமும் நிகழாது. அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.

ஒருவேளை, சீனாவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள பகுதிகளுக்கு இந்தியா மறுபெயரிட்டால், அவை இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளாக மாறிவிடுமா? எனவே, சீனா மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளிடையேயான உறவை பாதிப்படையச் செய்யும்.

அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவைப் பேண இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்தியாவின் சுயமரியாதையை யாராவது கெடுக்க முயன்றால், தகுந்த பதிலடி கொடுக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்றாா் அவா்.