ஹிந்து மாணவிகளுடன் பேசிய முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல்

லவ் ஜிகாத் குற்றச்சாட்டை முன்வைத்து முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம்
சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம்படம்: பல்கலைக்கழக வலைதளம்

ஹிந்து மாணவிகளுடன் பேசியதற்காக முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புணேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் 19 வயதுடைய முஸ்லிம் மாணவர் ஒருவர், இரண்டு ஹிந்து மாணவிகளுடன் அமர்ந்து ஞாயிற்றுக்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மாணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில்,

“கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்கு பிறகு இரண்டு மாணவிகளுடன் தாக்கப்பட்ட மாணவர் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 5 நபர்கள் ஹிந்து மாணவிகளுடன் பேசி லவ் ஜிகாத் செய்கிறாயா எனக் கூறி தாக்கியதாக மாணவர் புகார் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com