ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

2025-க்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு: சமாஜவாதி தேர்தல் வாக்குறுதி

News image
Updated On :10 ஏப்ரல் 2024, 9:47 pm

DIN

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது; அதில் 2025-க்குள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும், சட்டப்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்வதோடு, பாஜக அரசு கொண்டுவந்த அக்னிபத் திட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜவாதி கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி லக்னெüவில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம். தனியார் துறைகளில் அனைத்து சமூகத்தினரும் பணிபுரிவதை உறுதி செய்வோம். 2029-க்குள் மாநிலத்தில் ஏழ்மையைப் போக்குவோம்.பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்; அரசுத் துறைகளிலும் அவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

ரூ.500 மதிப்புள்ள மொபைல் டேட்டா அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.

மத்தியில் பாஜக ஆட்சியில் நீடித்தால் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் சாசனத்தையே மாற்றி விடுவர் என்று சமாஜவாதி கட்சி மட்டுமின்றி நாட்டு மக்களும் அச்சமடைந்துள்ளனர் என்றார்.

62 தொகுதிகளில் போட்டி: உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 62 தொகுதிகளில் சமாஜவாதி கட்சி போட்டியிடுகிறது.

பிற தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 17 தொகுதியிலும், திரிணமூல் காங்கிரஸ் பதோகி தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.