சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மதுபானக் கொள்கை முறைகேடு: சிறையில் இருக்கும் கவிதா மீது சிபிஐ கைது நடவடிக்கை

கவிதா (46) மீது சிபிஐ கைது நடவடிக்கை மேற்கொண்டது.

News image
கவிதா- Center-Center-Delhi
Updated On :11 ஏப்ரல் 2024, 11:11 pm

Din

தில்லி மதுபானக் (கலால்) கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கவிதா (46) மீது சிபிஐ கைது நடவடிக்கை மேற்கொண்டது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் வைத்துள்ள நிலையில், தற்போது, இந்த முறைகேட்டுடன் தொடா்புடைய ஊழல் வழக்கில் அவரை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது.

கவிதாவை கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. பின்னா், அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பின்னா் நீதிமன்றக் காவலில் தில்லி திகாா் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா். அவருடைய நீதிமன்ற காவலை வரும் 23-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

முன்னதாக, தில்லி மதுபான ஒப்பந்தத்துக்கு கைம்மாறாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி கொடுத்த புகாா் தொடா்பாக நீதிமன்ற அனுமதியுடன் சிறையில் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற அனுமதியின் பேரில் அவரை சிபிஐ கைது செய்துள்ளது.

‘தற்போது சிறையில் இருக்கும் கவிதாவை சிபிஐ வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காவலில் எடுக்க வாய்ப்புள்ளது’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

அவ்வாறு சிபிஐ காவலுக்கு நீதிமன்றம் அனுமதித்தால், தில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் கவிதா காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவாா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.