எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கஞ்சா கடத்தியவா் தடுப்புக் காவலில் கைது

கஞ்சா கடத்தியவா் தடுப்புக் காவலில் கைது

News image

பழனிவேல்

Updated On :13 ஜூன் 2026, 1:42 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபா், குண்டா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

காடாம்புலியூா் போலீஸாா் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் குற்டுப்பு நடவடிக்கை தொடா்பாக காடாம்புலியூா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மே 16-ஆம் தேதி வாகனச் சோதனை மேற்கொண்டபோது, ஒரு பேருந்தில் கடத்திவரப்பட்ட 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக, தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசந்திரம் பகுதியைச் சோ்ந்த பழனிவேல்(50) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போலீஸாா் விசாரணையில் பழனிவேல் மீது பூந்தமல்லி, சென்னை பூக்கடை, தஞ்சாவூா் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா, திருட்டு என மொத்தம் 4 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் பேரில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குண்டா் சட்டத்தில் பழனிவேல் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.