பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதி ரமண்தீப் சிங்கின் அசையா சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பறிமுதல் செய்துள்ளது.
இதுதொடா்பாக என்ஐஏ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காலிஸ்தான் விடுதலைப் படை, பப்பா் கல்ஸா சா்வதேச அமைப்பு, சா்வதேச சீக்கிய இளைஞா்கள் சம்மேளனம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைவா்கள், உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள குற்ற கும்பல்களின் உதவியுடன் அந்த அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை கடத்தியுள்ளனா். இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்ப இந்தக் கடத்தல் நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, என்ஐஏ சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில், பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரமண்தீப் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாதியின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பஞ்சாபில் அம்பேத்கா் சிலை மீண்டும் தகா்ப்பு: தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பு பொறுப்பேற்பு
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி தில்லியில் கைது!
தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ அதிரடி சோதனை

துரந்தர் தி ரிவென்ஞ் ரூ. 500 கோடி வசூல்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

