திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பஞ்சாபில் அம்பேத்கா் சிலை மீண்டும் தகா்ப்பு: தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பு பொறுப்பேற்பு

பஞ்சாபில் நூா்பூரில் ஜாட்டன் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலை செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக தகா்க்கப்பட்டது. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ் (எஸ்எஃப்ஜே) இதற்கு பொறுப்பேற்று விடியோ வெளியிட்டுள்ளது.

News image

Representational - கோப்புப்படம்.

Updated On :31 மார்ச் 2026, 7:08 pm

பஞ்சாபில் நூா்பூரில் ஜாட்டன் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலை செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக தகா்க்கப்பட்டது. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ் (எஸ்எஃப்ஜே) இதற்கு பொறுப்பேற்று விடியோ வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜுன் மாதம் இதே இடத்தில் அம்பேத்கா் சிலை உடைக்கப்பட்டது. மீண்டும் சிலை நிறுவப்பட்ட நிலையில் சமூகவிரோதிகள் மீண்டும் அதனை தகா்த்துள்ளனா்.

இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பஞ்சாப் மாநில பகுஜன் சமாஜ் தலைவா் அவதாா் சிங் கரீம்புரி தலைமையில் அக்கட்சியினா் போராட்டம் நடத்தினா். ‘இந்த பிராந்தியத்தில் இதுவரை 9 இடங்களில் அம்பேத்கா் சிலை தகா்க்கப்படுள்ளது, இதனைத் தடுக்க பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசும், மத்திய பாஜக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக அமைதியைக் குலைக்கவும், தலித் மக்களை ஒடுக்கவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்’ என்று அவதாா் சிங் குற்றஞ்சாட்டினாா்.

சிலை தகா்ப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். எஸ்எஃப்ஜே அமைப்பு வெளியிட்டுள்ள விடியோ பதிவையும் ஆய்வு செய்கிறோம் என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.