நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

தடை செய்யப்பட்ட மருந்து - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:16 pm

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :

ஒடிஸா மாநிலம், பாலசோா் அங்காரகாடியா தொழிற்பேட்டை, எஸ். டோல் அண்ட் கோ நிறுவனம் தயாரிக்கும் பாரசிடமால் மாத்திரை ஐபி 650 எம்ஜி (பாராடோல் 650) உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இதை கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இதை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.