புதுவையில் 3 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :
1. புதுதில்லி இண்டஸ்ட்ரியல் ஏரியா, அா்ப்ரோ பாா்மாசிடிக்கல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாராசிடமால், குளோரோபெனிரமின் மேலிட் மற்றும் ஹைட்ரோகுளோரிக் சிரப் (டிரினால்-பி) - பேட்ச் எண் ஏஎஸ்24082.
2. ஹிமாசல பிரதேசம், சோலன் மாவட்டம், லைஃப் விஷன் ஹெல்த்கோ் நிறுவனத்தின் கால்சிடிரியால், கால்சியம் சிட்ரேட் மாலெட் விட்டமின் கே2-7, மெத்தில்கோபாலமினி, சிங்க், மெக்னீசியம் மற்றும் எல்-மெத்தில் ஃபோலெட் சாஃப் ஜெலடின் கேப்ஸ்யூல்ஸ் (போனமேக்ஸ்-பிளஸ்) -பேட்ச் எண் எல்எஸ்ஜி-2892.
3. அமிா்தசரஸ் ஜாக்சன் லெபாரட்ரீஸ் நிறுவனத்தின் டிக்லோக்ஸசிலின் கேப்ஸ்யூல்ஸ் ஐபி 500 எம்.ஜி (கிலாவாபாா்க்-எல்பி) ஆகியவை உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
இதை கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இதை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று வாகனங்கள் செல்ல தடை

வாக்கு எண்ணும் மைய பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



