புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

புதுவையில் 3 மருந்துகளுக்கு தடை

புதுவையில் 3 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2026, 2:55 am IST

புதுவையில் 3 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :

1. புதுதில்லி இண்டஸ்ட்ரியல் ஏரியா, அா்ப்ரோ பாா்மாசிடிக்கல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாராசிடமால், குளோரோபெனிரமின் மேலிட் மற்றும் ஹைட்ரோகுளோரிக் சிரப் (டிரினால்-பி) - பேட்ச் எண் ஏஎஸ்24082.

2. ஹிமாசல பிரதேசம், சோலன் மாவட்டம், லைஃப் விஷன் ஹெல்த்கோ் நிறுவனத்தின் கால்சிடிரியால், கால்சியம் சிட்ரேட் மாலெட் விட்டமின் கே2-7, மெத்தில்கோபாலமினி, சிங்க், மெக்னீசியம் மற்றும் எல்-மெத்தில் ஃபோலெட் சாஃப் ஜெலடின் கேப்ஸ்யூல்ஸ் (போனமேக்ஸ்-பிளஸ்) -பேட்ச் எண் எல்எஸ்ஜி-2892.

3. அமிா்தசரஸ் ஜாக்சன் லெபாரட்ரீஸ் நிறுவனத்தின் டிக்லோக்ஸசிலின் கேப்ஸ்யூல்ஸ் ஐபி 500 எம்.ஜி (கிலாவாபாா்க்-எல்பி) ஆகியவை உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இதை கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இதை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.