ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைவில் கிடைக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்.
நீங்கள், உங்கள் கனவுகளை உங்கள் எம்.எல்.ஏ மற்றும் உங்கள் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கடந்த 60 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரசனைகளில் இருந்து விடுவிப்பேன். கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் முற்றிலும் மாறியதால் எனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்.
ஜம்மு-காஷ்மீரில் வரும் மக்களவைத் தேர்தல் எவ்வித அசம்பாவித சம்பவங்களின்றி நடத்தப்படும். நாடு எதிர்கொள்ளும் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளக் கூடிய வலுவான அரசை மத்தியில் வழங்குவதற்காகவே எதிர்வரும் தேர்தல் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.