ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவா்களுக்குக் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
ஆங்கிலேயா் ஆட்சியில் அரசுக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்கும் ரெளலட் சட்டம், கடந்த 1919-இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
பஞ்சாபில் உள்ள அமிருதசரஸின் ஜாலியன் வாலாபாக் பகுதியில் ஏப்.13-ஆம் தேதி மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினா். அப்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி மக்கள் மீது ஆங்கிலேயா் படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனா். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘தாய் நாட்டின் விடுதலைக்காக ஜாலியன் வாலாபாகில் அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரா்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் அந்த வீரா்களுக்கு கடன்பட்டுள்ளனா். அவா்களுடைய தேசப்பற்று வருங்கால தலைமுறையினருக்கு எப்போதும் உந்து சக்தியாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி: ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்த வீரத் தியாகிகளுக்கு நாட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினா்கள் சாா்பில் மரியாதை செலுத்துகிறேன் என பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக மீண்டும் நாளந்தா: குடியரசுத் தலைவா் முா்மு நம்பிக்கை

அயோத்தி ராமா் கோயிலில் குடியரசுத் தலைவா் முா்மு வழிபாடு

பழங்குடியினா் நலனில் அக்கறை இல்லாத மேற்கு வங்க அரசு: குடியரசுத் தலைவா் கடும் அதிருப்தி

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: குடியரசுத் தலைவா், பிரதமா், ராகுல் வாழ்த்து!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

