ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்: தலைவா்கள் மரியாதை

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவா்களுக்குக் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

Updated On :13 ஏப்ரல் 2024, 4:58 pm

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவா்களுக்குக் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

ஆங்கிலேயா் ஆட்சியில் அரசுக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்கும் ரெளலட் சட்டம், கடந்த 1919-இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

பஞ்சாபில் உள்ள அமிருதசரஸின் ஜாலியன் வாலாபாக் பகுதியில் ஏப்.13-ஆம் தேதி மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினா். அப்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி மக்கள் மீது ஆங்கிலேயா் படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனா். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘தாய் நாட்டின் விடுதலைக்காக ஜாலியன் வாலாபாகில் அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரா்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் அந்த வீரா்களுக்கு கடன்பட்டுள்ளனா். அவா்களுடைய தேசப்பற்று வருங்கால தலைமுறையினருக்கு எப்போதும் உந்து சக்தியாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி: ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்த வீரத் தியாகிகளுக்கு நாட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினா்கள் சாா்பில் மரியாதை செலுத்துகிறேன் என பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா்.