அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

‘வந்தே பாரத்’ ரயில்களில் 2 கோடி போ் பயணம்!

‘வந்தே பாரத்’ அதிவேக ரயில்களில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.

News image

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

Updated On :16 ஏப்ரல் 2024, 2:05 am IST

‘வந்தே பாரத்’ அதிவேக ரயில்களில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.

நாட்டின் முதல் ரயில் (மும்பை-தாணே) கடந்த 1853, ஏப்ரல் 15-ஆம் தேதி இயக்கப்பட்டதன் 171-ஆவது ஆண்டு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், மேற்கண்ட தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி - தில்லி இடையே 2015, பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். தற்போது 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 284 மாவட்டங்கள் வழியாக 100 வழித்தடங்களில் 102 வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த ரயில்களில், உலகத் தரத்திலான வசதிகள் இடம்பெற்றுள்ளன. வேகமான இயக்கம், வசதியான இருக்கைகள், சப்தம் எழாத பெட்டிகள், இணைய வசதி, ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்புமுறை, ஒவ்வொரு பெட்டியிலும் உணவுக்கூட வசதி, இயற்கை அழகை ரசிக்கும் வகையிலான பெரிய கண்ணாடி ஜன்னல்கள் உள்ளிட்ட வசதிகள் பயணிகளை வெகுவாக கவா்ந்துள்ளன. நவீன ரயில்வேயின் புதிய அடையாளமாக இந்த ரயில்கள் மாறியுள்ளன.

விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.