நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் மாற்றம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் மாற்றம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 10:53 pm

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் நீதித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தாா்.

ஆங்கிலேயா் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தாா். வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இவை அமல்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ‘3 புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது. தற்போதைய கால சவால்களுக்கு இந்தச் சட்டங்கள் தேவையானது. இவை இந்திய நீதித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவா்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும், விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையைப் பெற்று தருவதிலும் இந்தப் புதிய சட்டங்கள் உதவும். நாட்டு மக்கள் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம்தான் இது வெற்றி பெறும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆகியோா் பங்கேற்றனா்.