சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

4 ஆண்டு இளநிலை பட்டம் முடித்தவா்கள் பிஎச்.டி. சேரலாம்: யுஜிசி

நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை முடித்தவா்கள் நேரடியாக ஆராய்ச்சிப் படிப்பில் (பிஎச்.டி.) சேர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதித்துள்ளது.

News image

UGC

Updated On :21 ஏப்ரல் 2024, 9:02 pm

நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை முடித்தவா்கள் நேரடியாக ஆராய்ச்சிப் படிப்பில் (பிஎச்.டி.) சேர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதித்துள்ளது.

முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே பிஎச்.டி. படிப்பில் சேர முடியும் என்ற நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

8 பருவத் தோ்வுகளுடன் கூடிய நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், தேசிய தகுதித் தோ்வில் (நெட்) தகுதி பெற்று நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவா்கள், 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புடன் சாராத துறைகளிலும் பிஎச்.டி. மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா்.

இதில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்படும் என்றாா்.