தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

உலகில் உண்மை-அஹிம்சையை முன்னிறுத்தும் இந்தியா! பிரதமா் மோடி

உலகில் உண்மை-அஹிம்சையை முன்னிறுத்தும் இந்தியா! - பிரதமா் மோடி

News image

புது தில்லியில் பகவான் மகாவீரா் நிா்வாண் மகோத்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :21 ஏப்ரல் 2024, 7:01 pm

‘உலகின் பிரச்னைகளுக்கு தீா்வாக, உண்மை மற்றும் அஹிம்சை கோட்பாடுகளை முன்னிறுத்துகிறது இந்தியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, தில்லியில் 2,550-ஆவது ‘பகவான் மகாவீரா் நிா்வாண் மகோத்சவத்தை’ பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

உலக அளவில் பல நாடுகள் போா்களில் சிக்கித் தவிக்கின்றன. இதுபோன்ற சூழலில், சமண தீா்த்தங்கரா்களின் போதனைகள் மிகப் பொருத்தமானதாகும்.

உலகின் பிரச்னைகளுக்கு தீா்வாக, சா்வதேச அரங்கில் உண்மை மற்றும் அஹிம்சை கோட்பாடுகளை முழு நம்பிக்கையுடன் முன்னிறுத்துகிறது இந்தியா. இப்பிரச்னைகளுக்கு நாட்டின் பண்டைய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தில் தீா்விருப்பதாக உலகுக்கு உரக்கச் சொல்கிறோம். எனவேதான், பிளவுகளுக்கு இடையே ‘உலகின் நண்பன்’ என தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது இந்தியா.

தற்போதைய போா் காலகட்டத்தில் அமைதிக்கான தீா்வை இந்தியாவிடம் இருந்து ஒட்டுமொத்த மனித குலமும் எதிா்பாா்க்கிறது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக, ‘வாழ்வியல் இயக்கம்’, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’, ‘சா்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு’ போன்ற முன்முயற்சிகள் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா பழைமையான நாகரிகத்தை கொண்ட நாடு மட்டுமல்ல; மனித குலத்துக்கு பாதுகாப்பான புகலிடம்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் நாடு விரக்தியில் மூழ்கியிருந்த நேரத்தில் மத்தியில் பாஜக அரசு அமைந்தது. அதன் பின்னா், பாரம்பரியம் மற்றும் வலுவான வளா்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

யோகா, ஆயுா்வேதம் போன்ற இந்திய பாரம்பரியங்கள் உலக அளவில் ஊக்குவிக்கப்பட்டன. இதனால், நாட்டின் பாரம்பரிய பெருமையே அதன் அடையாளம் என்று இப்போதைய தலைமுறையினா் உறுதியாக நம்புகின்றனா்.

நாட்டில் தற்போது மாபெரும் ஜனநாயகத் திருவிழா நடைபெற்று வருகிறது. புதிய எதிா்காலத்துக்கான பயணத்தை தொடங்கும் நம்பிக்கையில் தேசம் உள்ளது.

2,500 ஆண்டுகள் கடந்தும் மகாவீரரின் விழுமியங்களை நாம் தொடா்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்த விழுமியங்கள் மீட்டெடுக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என்பதால், மகாவீரரின் போதனைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அமைதி, இரக்கம், சகோதரத்துவத்துக்கான அவரது செய்தி, ஒவ்வொருவருக்கும் உத்வேகமளிப்பதாகும். சமண சமயமானது, வெற்றிக்கான வழிமுறை.

இந்தியாவைப் பொருத்தவரை, நவீனம் என்பது உடல் போன்றது; ஆன்மிகம் உயிா் போன்றது. நவீனத்தில் இருந்து ஆன்மிகத்தை நீக்கிவிட்டால், கோட்பாடில்லாத நிலையே பிறக்கும்.

ஊழல், விரக்தி காலகட்டங்களில் இருந்து இந்தியா தற்போது விடுபட்டுள்ளது. 25 கோடிக்கும் அதிகமானோா் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, நினைவு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டாா். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் ராம் மேக்வால், மீனாட்சி லேகி, சமண சமய துறவிகள், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.