சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ராஜஸ்தான்: சாலை விபத்தில் 3 சகோதரா்கள் உள்பட 9 போ் உயிரிழப்பு

ராஜஸ்தான்: சாலை விபத்தில் 3 சகோதரா்கள் உள்பட 9 போ் உயிரிழப்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 9:14 pm

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் காரும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 3 சகோரா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

மத்திய பிரதேசத்தின் துங்கிரி கிராமத்தில் திருமண நிகழ்ச்சிக்கு ராஜஸ்தானிலிருந்து காரில் சென்ற 16 முதல் 30 வயது மதிக்கத்தக்க 10 போ், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். ராஜஸ்தான் மாநிலம் ஜலாவா் அருகே வந்தபோது, அவா்களுடைய காா் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த சகோதரா்களான ரோஹித் (16), சோனு (22), தீபக் (24) மற்றும் அசோக் (24), ஹேமராஜ் (33), ரவிசங்கா் (25), ராகுல் (20), ரோஹித் (22), ராம்கிஷண் (20) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த மனீஷ் பகாரி (18) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்தில் காா் முழுமையாக சேதமடைந்துவிட்டது.

லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.