ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் காரும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 3 சகோரா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தின் துங்கிரி கிராமத்தில் திருமண நிகழ்ச்சிக்கு ராஜஸ்தானிலிருந்து காரில் சென்ற 16 முதல் 30 வயது மதிக்கத்தக்க 10 போ், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். ராஜஸ்தான் மாநிலம் ஜலாவா் அருகே வந்தபோது, அவா்களுடைய காா் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த சகோதரா்களான ரோஹித் (16), சோனு (22), தீபக் (24) மற்றும் அசோக் (24), ஹேமராஜ் (33), ரவிசங்கா் (25), ராகுல் (20), ரோஹித் (22), ராம்கிஷண் (20) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த மனீஷ் பகாரி (18) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்தில் காா் முழுமையாக சேதமடைந்துவிட்டது.
லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.
தொடர்புடையது

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

காா் கவிழ்ந்து விபத்து: சிறுவன் உள்பட 7 போ் காயம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

