மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா? வாய்ப்பே இல்லை!

News image
Updated On :23 ஏப்ரல் 2024, 11:14 am

DIN

வாட்ஸ்ஆப், தனது பயனர்களின் வசதிக்காக, தொடர்ந்து புதுப் புது சேவைகளைக் கொண்டு வருவதில் அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்று பெயரெடுத்து வருகிறது.

அதில் ஒரு புதிய வசதியாக, இன்டெர்நெட் இல்லையென்றாலும் வாட்ஸ்ஆப் மூலம் புகைப்படங்களை அனுப்பும் வசதி வரவிருக்கிறதாம்.

வாரந்தோறும் என்று சொல்வதைக் காட்டிலும் நாள்தோறும் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் வாட்ஸ்ஆப்பில் வந்துகொண்டேதானிருக்கும். பயனர்கள் வேண்டுமென்றால் புதிய அப்டேட்களை கண்டுகொள்ளாமலிருக்கலாம்.

ஆனால் பயனர்களுக்கு இது தேவைப்படுமோ, இப்படி இருக்கலாமோ என்று யோசித்து யோசித்து புதிய புதிய உக்திகளைக் கொண்டு வந்துகொண்டேதானிருக்கும். அதில் புதிதாக வரவிருப்பது அதாவது ஆஃப்லைனில் இருந்தாலும் புகைப்படங்களை பகிரும் வசதிதான்.

ப்ளூடூத் வழியாக, அருகில் இருக்கும் டிவைசஸை ஸ்கேன் செய்து அதன் மூலம் புகைப்படங்களை அனுப்ப அனுமதி அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்படவிருக்கிறதாம்.

அதாவது, இந்த சேவையானது, இதுவரை ஷேர் செயலிகளில் செயல்பட்ட தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் பரிமாறப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, பயனரிடம் இன்டெர்நெட் இல்லாவிட்டாலும், இந்த புதிய வசதியை வைத்து அவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை பரிமாறிக் கொள்ளலாம். விரைவில்இது புகைப்படம், விடியோ, இசை, ஆவணங்கள், கோப்புகள் என எதையும் பகிரும் வகையில் கொண்டுவரப்படவிருக்கிறது.

இந்த வசதியும், இரு தரப்பினரும் மட்டுமே பகிர்ந்துகொள்ளும் வகையிலும், இதில் எந்த பாதுகாப்புக் குறைபாடும் ஏற்படாத வகையில்தான் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதாம்.

இது குறித்து வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், இது அருகிலிருக்கும் செல்போன்களுக்கு மட்டுமே பகிர முடியும். ஆன்டிராய்டு வசதிகொண்ட செல்போன்களில் முதல்கட்டமாக சோதிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த வசதி வேண்டுமென்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.