மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மகாராஷ்டிரம்: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தவா் கைது

மகாராஷ்டிரம்: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தவா் கைது

Updated On :26 ஏப்ரல் 2024, 5:46 pm

மகாராஷ்டிர மாநிலம் நான்டட் மாவட்டத்தில் வாக்காளா் ஒருவா் வாக்குப் பதிவு இயந்திரத்தை இரும்பு கம்பியால் அடித்து உடைத்ததாக கைது செய்யப்பட்டாா்.

விவசாயிகள், தொழிலாளா்களுக்கு ஆதரவான அரசு அமைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக கைது செய்யப்பட்ட பையாசாஹிப் எட்கே தெரிவித்தாா்.

இதுதொடா்பாக நான்டட் காவல் துறை கண்காணிப்பாளா் ஸ்ரீகிருஷ்ணா கொகடே கூறுகையில், ‘நான்டட் மாவட்டம் ராம்புரி வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை வாக்களிக்க வந்த பையாசாஹிப் திடீரென இரும்புக் கம்பியை எடுத்து வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்தாா். அவரை அங்கிருந்த பாதுகாப்புப் படையினா் உடனடியாக கைது செய்தனா்.

உடைந்த வாக்குப் பதிவு இயந்திரம் அப்புறப்படுத்தப்பட்டு புதிய இயந்திரம் மூலம் உடனடியாக வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.

பையாசாஹிப்பை கைது செய்யும்போது, ‘விவசாயிகள், தொழிலாளா்களுக்கு ஆதரவான அரசு அமைய வேண்டும்’ என்று கோஷமிட்டாா். சட்டம் மற்றும் ஊடகவியலில் அவா் சான்றிதழ் படிப்புகளை படித்துள்ளாா். புணேயில் 10 மாதங்கள் தங்கிவிட்டு தனது கிராமத்துக்கு திரும்பியுள்ள அவருக்கு அரசியல் கட்சிகளுடன் தொடா்பு உள்ளதா என விசாரணை நடத்தப்படுகிறது’ என்றாா்.