ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

குஜராத் கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் படகில் 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 10:35 am

Ravivarma.s

குஜராத் கடற்பகுதியில் இரண்டாவது நாளாக 173 கிலோ எடையுள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினருடன் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் இணைந்து குஜராத் கடற்பகுதிக்குள் சென்று கொண்டிருந்த மீன்பிடிப் படகில் திங்கள்கிழமை சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையின் போது படகில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அரபிக் கடலில் நடத்தப்பட்ட சோதனையில் பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Story image

மேலும், படகில் பயணித்த பாகிஸ்தானை சேர்ந்த 14 பேரை கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.