அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் அதிகரித்திருக்கும் நிலையில் சீசன் நோயாக மாறியதா கரோனா என்று கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் 6,228 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக
சென்னையில் 6,228 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மூச்சுவிடுவதில் சிரமம், இருமல், சளி, தொண்டை வலியுடன் காய்ச்சலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்தப் பிரச்னை குறிப்பாக தில்லி, ஃபரிதாபாத், கொல்கத்தா, மும்பை, பெங்களூரு நகரங்களில் அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவுக்கு இருக்கும் அனைத்து அறிகுறிகளும் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கும் இருப்பதால், இது கரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா அல்லது கரோனாவே சீசன் நோயாக மாறியிருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் வைரஸ் காரணமாக என்று பல தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், நாட்டில் இதுவரை அபாய நிலைக்கு எதுவும் செல்லவில்லை என்றும், கரோனா வைரஸ் பல கட்ட திரிபுகளை அடைந்து, தற்போது ஒமைக்ரானின் துணைப் பிரிவுதான் தற்போது நாட்டில் பரவி வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 6,228 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக
சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

அதோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் எந்தவிதமான கரோனா தீநுண்மி பரவி வருகிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதுவரை காய்ச்சல் பாதித்தவர்களில் யாருக்கும் உடல்நிலை மோசமடைவதோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையோ ஏற்படுவில்லை. ஆனால், நாடு முழுவதும் ஏற்கனவே பரவிக் கொண்டிருக்கும் வைரஸ்களுடன் தற்போது கரோனா வைரஸ் இணைந்து, சளி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்கின்றன சுகாதாரத் துறை.

தில்லியில் ஒரு சில மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் அவை அபாய நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான அறிகுறி இருப்பவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள மறுத்துவிடுகிறார்கள். சிலருக்கு சோதனை செய்யும்போது அவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது. எனவே, மிகச் சரியான கரோனா நோயாளிகள் எண்ணிக்கையை தெரிவிக்க முடியவில்லை என்கின்றன தில்லி மருத்துவமனை வட்டாரங்கள். தற்போதைக்கு வாரத்துக்கு 2 முதல் மூன்று நோயாளிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் குணமடைய 2 முதல் 3 வாரங்கள் ஆவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com