மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் கனமழை: 50 பேர் பலி!

மழை பாதிப்புகளில் சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அமைச்சர் விக்கிரமாதித்ய சிங் தெரிவித்துள்ளார்.

News image
ராம்பூரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு- படம் | ஏஎன்ஐ
Updated On :3 ஆகஸ்ட் 2024, 1:17 pm

DIN

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. கடந்த 4 நாள்களாக பெய்துவரும் தொடர் மழையால் சிம்லா, குளு, மண்டி ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ள பாதிப்புகளில் மொத்தம் 53 பேரைக் காணவில்லை என்றும், 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை பாதிப்புகளில் சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அமைச்சர் விக்கிரமாதித்ய சிங் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகள் நிறைவடைந்த பின்னரே, உயிரிழந்தோர் குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 190 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சாலைகளின் வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Story image

இதனிடையே, கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சமேஜ் கிராமம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அந்த பகுதியில் தற்போது ஒரேயொரு வீடு மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், பிற கட்டடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை இரவு வேளையில், சமேஜ் கிராமத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து ஒட்டுமொத்த கிராமமும் வெள்ளத்தில் மிதந்ததாகவும், இதையடுத்து அங்குள்ள பகவதி காளி மாதா கோயிலில் தஞ்சமடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த அனிதா தேவி என்ற பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Story image

இதனிடையே, ஹிமாசலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழு, இந்தோ திபெத் எல்லைக் காவல் ஆகிய பாதுகாப்புப் பிரிவுகளை சேர்ந்த 410 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.