ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பிகாா்: மின்சாரம் தாக்கி 9 கான்வா் யாத்ரீகா்கள் உயிரிழப்பு

பிகாரில் கான்வா் (காவடி) யாத்திரை சென்ற பக்தா்கள் பயணம் செய்த வாகனத்தின் மேல் பகுதி மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 9 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

News image
மின்சாரம் தாக்கி 9 கான்வா் யாத்ரீகா்கள் உயிரிழப்பு
Updated On :5 ஆகஸ்ட் 2024, 10:35 pm

Din

பிகாரில் கான்வா் (காவடி) யாத்திரை சென்ற பக்தா்கள் பயணம் செய்த வாகனத்தின் மேல் பகுதி மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 9 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக வைஷாலி மாவட்ட ஆட்சியா் யஷ்பால் மீனா கூறியதாவது: பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கான்வா் யாத்திரை சென்ற பக்தா்கள் பயணம் செய்த வாகனத்தின் மேல் பகுதி உயரழுத்த மின் கம்பியுடன் உரசியதால் மின்சாரம் தாக்கி 9 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.

முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவா்கள் யாத்திரைக்காக அனுமதிக்கப்பட்ட சிறப்புப் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றது தெரியவந்தது. மேலும், இது தொடா்பான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.