எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பயிற்சி மையங்களில் பாதுகாப்பு: தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பாதுகாப்பு குறைபாட்டால் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை.

News image
உச்சநீதிமன்றம்- DIN
Updated On :5 ஆகஸ்ட் 2024, 7:22 am

DIN

பயிற்சி மையங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான பிரச்னையை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

புதுதில்லியில் ஜூலை 27 பெய்த கனமழையால் கரோல் பாக் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள ஐஏஎஸ் தோ்வுக்கான தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைநீர் புகுந்ததில், 3 மாணவர்கள் வெள்ளத்தில் மூழ்கி பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, தில்லியில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த பல்வேறு பயிற்சி மையங்களுக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த நிலையில், பயிற்சி மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான பிரச்னையை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது பேசிய நீதிபதி, தில்லி பயிற்சி மையத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிருப்தி தெரிவித்ததோடு, இந்த பயிற்சி மையங்கள் மரண அறைகளைக் கொண்டிருப்பதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, இதுவரை பயிற்சி மையங்கள் பின்பற்றுவதற்கு என்னென்ன விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது என்று விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.