மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு நிலச்சரிவு: உரிமையாளரைக் கண்டறிந்த வளர்ப்பு நாய்!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு, வளர்ப்பு நாய் தனது உரிமையாளரைக் கண்டறிந்து அவரிடம் சேர்ந்துள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:20 pm

DIN

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு, வளர்ப்பு நாய் தனது உரிமையாளரைக் கண்டறிந்து அவரிடம் சேர்ந்துள்ளது.

வளர்ப்பு நாயைக் கண்ட உரிமையாளர், நாயை ஆரத்தழுவி தனது கண்ணீர் மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மலைக்கிராமங்களில் கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரமாலா, அட்டமாலா, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. பலர் மண்ணுக்குள் புதையுண்டனர்.

அவர்களைத் தேடும் பணியில் ராணுவம் உள்ளிட்ட மத்திய படைகளுடம் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 7வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 386 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 273 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 180 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலச்சரிவில் உரிமையாளரை இழந்த நாய் ஒன்று, 7 நாள்களுக்குப் பிறகு தனது உரிமையாளரைக் கண்டறிந்துள்ளது.

இதனை அங்கிருந்த ஒருவர் விடியோ எடுத்து எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் ஆகாரமின்றி மிகவும் நலிவடைந்த நாய் ஒன்று, வெள்ளம், இடிபாடுகளுக்கு மத்தியில் தனது உரிமையாளரைத் தேடித்திரிந்துள்ளது. 7 நாள்களுக்குப் பிறகு இன்று தனது உரிமையாளரை அந்த நாய் அடையாளம் கண்டுள்ளது. இடிபாடுகளில் குடும்ப உறவுகளை, உடமைகளை இழந்த உரிமையாளர், தான் வளர்த்த நாயைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஆரத்தழுவி கண்ணீர் வடித்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.