நீர் மின் திட்டங்களைப் பொருத்தவரையில், நதிகள் இணைப்பு மூலம் அதை சாத்தியமாக்கலாம். கோதாவரி, பாலாறு, காவிரி நதிகளை இணைப்பது ஒரு வாய்ப்பு. ஆனால், அத்திட்டம் நிலுவையில் உள்ளது. கர்நாடகத்தில் இருந்து ஓடும் தென் பெண்ணையாறு தமிழகத்துக்கு வருகிறது. அதன் நீரை தேக்கி வைக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் ஒரு அணையை கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அது நிறைவேறினால் நீர் மின்னுற்பத்தியை பெருக்குவதுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனப்பள்ளி, மகராஜாகடை, மேகலசின்னம்பள்ளி (எம்.சி.பள்ளி) , வரட்டனப்பள்ளி, பர்கூர் போன்ற வறண்ட பகுதிகளில் நீர் பிரச்னைகளை தீர்க்க முடியும்.