மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை நியமித்தது பாஜக!
மாநிலங்களவை தேர்தலுக்கு முன் மத்திய பார்வையாளர்களை நியமித்தது பற்றி..


மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பாஜக தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிகார், ஹரியாணா மற்றும் ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களில் மத்திய பார்வையாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது.
அதன்படி, பிகார் தேர்தலுக்கான மத்திய பார்வையாளராக மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி ஹரியாணாவுக்கான பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஒடிசாவில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மத்திய பார்வையாளராக மகாராஷ்டிர அமைச்சர் சந்திரசேகர் பவல்குலே இருப்பார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...