மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பாஜக தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிகார், ஹரியாணா மற்றும் ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களில் மத்திய பார்வையாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது.
அதன்படி, பிகார் தேர்தலுக்கான மத்திய பார்வையாளராக மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி ஹரியாணாவுக்கான பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஒடிசாவில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மத்திய பார்வையாளராக மகாராஷ்டிர அமைச்சர் சந்திரசேகர் பவல்குலே இருப்பார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
BJP chief Nitin Nabin on Monday appointed central observers for Rajya Sabha polls in Bihar, Haryana and Odisha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது பாஜக!!

மோடி தீவிரவாதியா? கார்கே விமர்சனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

திருப்பரங்குன்றத்தில் தீபம்! பாஜக தேர்தல் அறிக்கை!
திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


